லக்கிம்பூர் வன்முறை: எதிர்க்கட்சியினர் அமளியால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

லக்கிம்பூர் வன்முறையின் விசாரணை குழுவின் அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
லக்கிம்பூர் வன்முறை: எதிர்க்கட்சியினர் அமளியால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு
Published on
Updated on
1 min read

லக்கிம்பூர் வன்முறையின் விசாரணை குழுவின் அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

உத்தரப் பிரதேசம், லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றியதும், வன்முறையில் ஈடுபட்டதும் திட்டமிட்டு செய்யப்பட்ட சதி எனவும், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழு நேற்று உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளித்தது.

இந்நிலையில், இன்று காலை மக்களவை தொடங்கியதில் இருந்து லக்கிம்பூர் சம்பவம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சியினர் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பினர்.

எதிர்க்கட்சியினரின் அமளி தொடர்ந்ததால், மக்களவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com