தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

இது மக்கள் விரோத நிதிநிலை அறிக்கை: மம்தா பானர்ஜி

​மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை மக்களுக்கு விரோதமாக உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமரிசித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2021, 11:17 am

DIN


மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை மக்களுக்கு விரோதமாக உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமரிசித்துள்ளார்.

2021-22 நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கை குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வரிசையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தது:

"இது மக்கள் விரோத நிதிநிலை அறிக்கை. பொய்யான கருத்துகளையே எப்போதும் வெளியிடுவர். நாட்டின் காகிதமில்லா முதல் நிதிநிலை அறிக்கை கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளையும் விற்றுவிட்டது. அமைப்பு சாரா துறைக்கென நிதிநிலை அறிக்கையில் எதுவுமே இடம்பெறவில்லை."

நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: இங்கே க்ளிக் செய்யவும்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.