தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை: திருச்சி சிவா

இயற்கை பேரிடர் காலங்களில் தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை: திருச்சி சிவா
தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை: திருச்சி சிவா
Published on
Updated on
1 min read

இயற்கை பேரிடர் காலங்களில் தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார்.

குடியரசுத்  தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது பேசிய அவர், வெள்ளம், வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிவாரணம் வழங்கவில்லை என்று கூறினார்.

சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் மக்களின் எதிர்ப்புகளையும் மீறி வலுக்கட்டாயமாக அமல்படுத்தப்பட்டது என்று குறிப்பிட்டார்.

டெல்டா பகுதிகளில் மக்களின் எதிர்ப்புகளையும் மீறி ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டது என்றும் மாநிலங்களவையில் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக தமிழக மீனவர்கள் இலங்கை எல்லைப் பகுதிகளில் சுட்டுக் கொல்லப்படுவது குறித்தும் திருச்சி சிவா மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com