மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்னாள் பேரவைத் தலைவர் நானா பட்டோலே நியமிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவராக பாலாசாகேப் தோராட் பதவி வகித்து வருகிறாா். அவா் மாநில வருவாய்த் துறை அமைச்சராகவும் உள்ளாா். இவா் மாநில காங்கிரஸ் தலைவா் பதவியில் தொடர விரும்பவில்லை என்று தகவல் வெளியானது. அவா் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சா்கள் குழு தில்லியில் கட்சித் தலைமையை சமீபத்தில் சந்தித்தது.
இந்த சூழலில், மாநில சட்டப்பேரவைத் தலைவா் நானா பட்டோலே தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா். அவா் தனது ராஜிநாமா கடிதத்தை பேரவைத் துணைத் தலைவா் நா்ஹரி ஜிா்வாலிடம் வியாழக்கிழமை வழங்கினாா்.
இதனைத் தொடர்ந்து அவா் மாநில காங்கிரஸ் தலைவராக வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.