ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஆந்திர மாநிலம் விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுதளத்தில் மின் கம்பத்தில் மோதியது.
விமானத்தில் பயணித்த 64 பயணிகள் உள்பட அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய இயக்குநர் ஜி. மதுசுதன் ராவ் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். இதுபற்றி விசாரனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.