கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம், மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப், கர்நாடகம் மற்றும் குஜராத் ஆகிய ஆறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆறு மாநிலங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் 86.37 சதவிகித பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் பகுதிகளில் மத்திய அரசு குழு அனுப்பி கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், கேரளம், மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழகம், மேற்கு வங்கம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், குஜராத், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு குழு அனுப்பியுள்ளது.
அங்கு மாநில சுகாதாரத்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணிகளில் மத்திய உயர்மட்டக் குழு ஈடுபடவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சத்தான்குளம் வழக்கில் நீதி! மற்ற குடும்பங்கள் பாதிக்கப்படக் கூடாது : ஜெயராஜ் மகள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
கோழைத்தனமான தலைவர்களுக்கு அதிகாரப் பசி! - யாரைச் சொல்கிறார் பிரியங்கா?
தினப்பலன்கள் - மீனம்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


