பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தடுப்பு மருந்து புரளிகளை மக்கள் நம்ப வேண்டாம்: சுகாதாரத்துறை

தடுப்பு மருந்து குறித்து சிலரால் பரப்பப்படும் புரளிகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

News image
சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் (கோப்புப்படம்)
Updated On :2 ஜனவரி 2021, 5:08 am

DIN


தடுப்பு மருந்து குறித்து சிலரால் பரப்பப்படும் புரளிகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

தில்லியில் கரோனா தடுப்பு மருந்து ஒத்திகையை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் அவர் பேசியதாவது, ''கரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்கு ஒத்திகை நடைபெற்று வரும் நிலையில், திட்டமிட்டு பரப்பப்படும் புரளிகளை மக்கள் நம்ப வேண்டாம். கரோனா தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

போலியோ தடுப்பு மருந்து கொடுக்கும்போது பல்வேறு விதமான புரளிகள் பரப்பப்பட்டன. ஆனால் மக்கள் போலியோ தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டனர். அதன் பலன் தற்போது போலியோ இல்லாத நாடாக இந்தியா மாறியுள்ளது'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.