திருப்பதி: பிப்ரவரி மாத விரைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை வெளியீடு

ஏழுமலையானை வரும் பிப்ரவரி மாதம் தரிசிப்பதற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் புதன்கிழமை (ஜனவரி 20) காலை வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானம்
திருப்பதி தேவஸ்தானம்
Published on
Updated on
1 min read

திருப்பதி: ஏழுமலையானை வரும் பிப்ரவரி மாதம் தரிசிப்பதற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் புதன்கிழமை (ஜனவரி 20) காலை வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் புதன்கிழமை காலையில் பிப்ரவரி மாதத்துக்கான ரூ.300 விரைவு தரிசன கட்டணடிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன. காலை 9 மணி முதல் இந்த டிக்கெட்டுகள் முன்பதிவுக்காக வைக்கப்படும்.

மேலும் அதே நாளில் மாலை 3 மணிக்கு பிப்ரவரி மாதத்துக்கான வாடகை அறை முன்பதிவு டிக்கெட்டுகளும் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. பக்தா்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com