தில்லி எல்லையான சிங்கு பகுதியிலுள்ள விவசாயிகளை காலி செய்ய வலியுறுத்தி உள்ளூர் மக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
40-க்கும் அதிகமான விவசாய அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், குடியரசு தின டிராக்டர் பேரணியில் கலவரம் ஏற்பட்டதால், 2 விவசாய அமைப்புகள் போராட்டத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளன.
இதனிடையே சிங்கு எல்லைப் பகுதிகளை விவசாயிகள் காலிசெய்ய வலியுறுத்தி உள்ளூர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிங்கு எல்லையில் கூடிய பொதுமக்கள் கைகளில் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு சிங்கு பகுதியினை காலி செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.