நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஷரத் திரிபாதி மறைவு: மோடி இரங்கல்

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஷரத் திரிபாதியின் அகால மறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஷரத் திரிபாதி
ஷரத் திரிபாதி
Updated on
1 min read



புதுதில்லி: நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஷரத் திரிபாதியின் அகால மறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரையில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "நாடாளுமன்ற பாஜக முன்னாள் உறுப்பினர் ஷரத் திரிபாதியின் அகால மரணம் என்னையும், பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் சமுதாயத்திற்கு சேவை செய்வதையும், நலிவுற்ற மக்களுக்காக உழைப்பதையும் மிகவும் நேசித்தார். கபீர்தாசரின் கொள்கைகளை பிரபலப்படுத்துவதற்காக அவர் புதுமையான முயற்சிகளை மேற்கொண்டார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி" என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com