சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

திருவனந்தபுர விலங்கியல் பூங்காவில் ராஜநாகம் கடித்து பணியாளர் பலி

​திருவனந்தபுர விலங்கியல் பூங்காவில் ராஜநாகம் கடித்து பணியாளர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :1 ஜூலை 2021, 12:29 pm


திருவனந்தபுர விலங்கியல் பூங்காவில் ராஜநாகம் கடித்து பணியாளர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

பூங்காவில் விலங்குகளுக்கு உணவு வழங்கும் பொறுப்பில் ஹர்ஷத் இருந்ததாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர். சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சியில் இடத்தை சுத்தம் செய்து, விலங்குக்கு உணவு வைக்க பகல் 12.15 மணிக்கு அவர் பாம்பு கூண்டுக்குள் நுழைகிறார். அதன்பிறகு, நீண்ட நேரமாக அவரைக் காணவில்லை என்றவுடன் சக பணியாளர்கள் அவரைத் தேடிச் சென்றுள்ளனர். அப்போது அவர் அந்தக் கூண்டுக்குள் இருப்பதைப் பார்த்திருக்கின்றனர்.

இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.