உத்தரகண்ட்: பாஜக எம்எல்ஏ மீது பாலியல் வழக்கு
உத்தரகண்ட் பாஜக எம்எல்ஏ சுரேஷ் ரத்தோர் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
உத்தரகண்ட் பாஜக எம்எல்ஏ சுரேஷ் ரத்தோர் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ஜ்வாலாபூர் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ சுரேஷ் ரத்தோர். இவர் மீது பாலியல் பலாத்காரம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஹரித்வார் காவல் கண்காணிப்பாளர் அபுதாய் கிருஷ்ணராஜ் தெரிவித்துள்ளது.
இதனிடையே வழக்கு குறித்து சுரேஷ் ரத்தோர் கூறுகையில், "எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. இதை நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். சிலர் தனக்கு எதிராக சதி செய்கிறார்கள். வழக்கை விசாரித்து உண்மையை வெளிப்படுத்துமாறு காவல்துறையினரிடம் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...