கேரள தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 16-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மேலும் ஜூலை 16-ம் தேதிக்குள் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் கேரள உயநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூதரகம் வழியாக தங்கம் கடத்திய வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் முக்கிய குற்றவாளியாக சோ்க்கப்பட்டுள்ளாா். இது தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது
என்ஐஏ நீதிமன்றம் இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷுக்கு ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் கேரள உயா் நீதிமன்றத்தை அவா் நாடியுள்ளாா்.
இந்நிலையில் இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கேரள உயர்நீதிமன்றம், மனு மீதான விசாரணையை ஜூலை 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மேலும், இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் தொடா்புடைய ஸ்வப்னா சுரேஷ், கே.டி.ரமீஸ், சந்தீப் நாயா், பி.எஸ்.சரித் உள்ளிட்ட ஏழு பேரின் ஜாமீன் மனுக்களை என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் கடந்த மாா்ச் 22-ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.