மத்திய அமைச்சரவையில் புதிதாக 7 பெண் அமைச்சர்கள் புதன்கிழமை பதவியேற்றுக்கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. 43 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில் 36 பேர் புதியவர்கள்.
மீனாக்ஷி லேகி, அனுப்ரியா படேல், ஷோபா கரந்தலஜே உள்ளிட்ட 7 பெண்கள் புதிதாக அமைச்சர் பதவியேற்றுள்ளனர். ஏற்கெனவே அமைச்சராக இருக்கும் நிா்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, சாத்வி நிரஞ்சன் ஜோதி, ரேணுகா சிங் ஆகியோருடன் சேர்த்து பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, அமைச்சரவை விரிவாக்கத்தையொட்டி 12 மத்திய அமைச்சர்கள் ராஜிநாமா செய்தனர். இவர்களில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் இணையமைச்சராக இருந்த தேவஸ்ரீ சௌதரியும் ஒருவர்.