ஹிமாசலப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரபத்ர சிங் கரோனாவுக்குப் பிந்தைய பிரச்னைகள் காரணமாக வியாழக்கிழமை காலமானார்.
அவருக்கு சிகிச்சையளித்து வந்த இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் ஜனக் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியது:
“அவர் ஏபர்ல் 30-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எங்களது மருத்துவக் குழு அவரைத் தொடர்ந்து கண்காணித்து வந்தது. இரண்டு நாள்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்தது. வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.”
வீரபத்ர சிங் 9 முறை எம்எல்ஏ.,வாகவும், 5 முறை எம்பி.,யாகவும் இருந்துள்ளார். அவருக்கு வயது 87.