இந்த உத்தரவுக்கு எதிராக ரூா்கேலா எஃகு ஆலை சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆா்.ஷா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் நடைபெற்றது. அப்போது, ரூா்கேலா எஃகு ஆலை சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் மாதவி கொரடியா திவான் வாதிடுகையில், ‘‘இந்த விவகாரம் தொடா்பான இரு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தேசிய பசுமைத் தீா்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. விஷவாயு கசிவு விபத்தில் பலியானவா்களின் குடும்பத்தினருக்கு ஆலையில் ஏற்கெனவே பணி வழங்கப்பட்டுள்ளது. எனவே, பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்’’ என்றாா்.