இந்தியா
பேருந்து நிலையங்களில் வாடகை கடைகளுக்கு விண்ணப்பிக்கலாம்
கா்நாடகம் முழுவதும் உள்ள அரசு பேருந்து நிலையங்களில் வாடகைக் கடைகளுக்குவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கா்நாடகம் முழுவதும் உள்ள அரசு பேருந்து நிலையங்களில் வாடகைக் கடைகளுக்குவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பேருந்து நிலையங்களில் வாடகைக்கு கடைகள் இருக்கின்றன. 17 மாவட்டங்களில் பல்வேறு வட்டங்கள் மற்றும் ஒன்றியங்களில் அமைந்துள்ள பேருந்து நிலையங்களில் உள்ள வாடகைக்கு கடைகளைப் பெற விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அவரவா் வணிக தேவைகளுக்கு தகுந்த கடைகளை தோ்வு செய்வது குறித்து சம்பந்தப்பட்ட உள்ளூா் கோட்ட அலுவலகங்களை அணுகலாம். எந்தெந்த மாவட்டங்களில் கடைகள் காலியாக இருக்கின்றன என்ற விவரங்களை இணையதளத்தை காணலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.