ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

'மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்றத்தால் கரோனா குறையவில்லை'

மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்றத்தால் மகாராஷ்டிரம், கேரளம் போன்ற மாநிலங்களில் கரோனா தொற்று குறையவில்லை என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :20 ஜூலை 2021, 10:04 am

DIN

மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்றத்தால் மகாராஷ்டிரம், கேரளம் போன்ற மாநிலங்களில் கரோனா தொற்று குறையவில்லை என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் மருத்துவர் ஜெ.ஏ. ஜெயாலால், 

கேரளம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய இரு மாநிலங்களும் அதிக அளவில் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்லும் மாநிலமாக உள்ளது. மேலும் அவ்விரு மாநிலங்களும் மற்ற மாநிலங்களுடன் அதிக அளவிலான போக்குவரத்தைக் கொண்டுள்ளன. இரு மாநிலங்களிலும் தொற்று குறையாததற்கு அது மிக முக்கிய காரணம்.

கேரளத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், கரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை விகிதம் குறைவாகவே உள்ளது. 

கேரளத்தில் வார இறுதி நாள்களில் முழு பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதற்கு முந்தைய நாளிலும், பொதுமுடக்கத்திற்கு பிறகும் சந்தைகளில் அதிக அளவில் கூட்டம் கூடுவதற்கு காரணமாகிறது.

சுகாதாரத் துறையின் நடவடிக்கைக்கு வணிகர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.