‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஏஜிஆர் தொகையை மறு மதிப்பீடு செய்ய கோரும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மனு தள்ளுபடி

அரசுக்கு செலுத்த வேண்டிய ஏஜிஆர் நிலுவை தொகையை மறு மதிப்பீடு செய்ய கோரும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

உச்சநீதிமன்றம்

Published On :

அரசுக்கு செலுத்த வேண்டிய ஏஜிஆர் நிலுவை தொகையை மறு மதிப்பீடு செய்ய கோரும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள், தங்களின் வருவாயிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை அரசுக்கு உரிம தொகையாக செலுத்த வேண்டும். ஏஜிஆர் தொகை எனப்படும் இவற்றை செலுத்த உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகள் அவகாசம் வழங்கியது.

வோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல், டாடா சர்வீஸ் ஆகிய நிறுவனங்கள் கிட்டத்தட்ட 93 ஆயிரத்து 520 கோடியை அரசுக்கு ஏஜிஆர் நிலுவை தொகையாக செலுத்த வேண்டும். அதில், 10 சதவிகித நிலுவை தொகையை மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஏஜிஆர் நிலுவை தொகை மதிப்பீடுகளில் பிழை இருப்பதாகக் கூறி, தொகையை மீண்டும் கணிக்கிட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்தாண்டு ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இதுகுறித்த விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், நேற்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி நாகேஷ்வர ராவ் தலைமையிலான அமர்வு இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டது. தொலைத் தொடர்பு துறையின் கணக்குப்படி, பாரதி ஏர்டெல் 43 ஆயிரம் கோடி ரூபாயும் வோடாஃபோன் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாகவும் நிலுவை தொகையை செலுத்த வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.