சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள்: எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

நாடாளுமன்றக் கூட்டத்தில் அடுத்த கட்டமாக எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இன்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

News image

எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

Updated On :28 ஜூலை 2021, 5:01 am

ANI

நாடாளுமன்றக் கூட்டத்தில் அடுத்த கட்டமாக எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இன்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டம் தொடங்கிய நாள்முதல் பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அடுத்த கட்டமாக எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸின் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, திமுகவின் திருச்சி சிவா, டி.ஆர்.பாலு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.