நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

திருநங்கைகள் பல பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர்: மத்திய அரசு

திருநங்கைகள் இன்றும் பல பாகுபாடுகளை எதிர்கொள்வதாக நாடாளுமன்றத்தில் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 ஜூலை 2021, 9:37 pm IST

திருநங்கைகள் இன்றும் பல பாகுபாடுகளை எதிர்கொள்வதாக நாடாளுமன்றத்தில் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் திருநங்கைகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளித்து பேசிய அமைச்சகம், 

திருநங்கைகளில் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், திருநங்கை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 2019 இயற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியது.

இதன் மூலம் திருநங்கைகளுக்கான அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், அவர்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டது.

திருநங்கைகளுக்கான தேசிய கவுன்சிலை சேர்ந்த ஒருவர் அரசுத் திட்டங்களில் திருநங்கைகளுக்கான தேவைகள் குறித்து ஆலோசனை வழங்க தனியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

அவர் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அரசுத் திட்டங்கள், புதிய விதிமுறைகள், நிகழ்ச்சிகள், சட்டம் போன்றவற்றில் ஆலோசனைகள் பெறப்பட்டு அவை பரிசீலனை செய்து அமல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் அரசு இணையதளம் மூலம் திருநங்கைகள், சமூகத்தில் தங்களை வெளிப்படையாக அடையாளப்படுத்திக்கொள்ளும் வகையில் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

இதுவரை 3,77,565 திருநங்கைகள் இந்த இணையப் பக்கத்தை பார்வையிட்டுள்ளனர். 2,800 பேர் திருநங்கை அடையாள அட்டை பெற்று பயனடைந்துள்ளனர். 

திருநங்கைகளுக்கு உதவும் வகையில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இருப்பிடங்கள் அமைத்துக்கொள்ள அரசு உதவுகிறது. 

மகாராஷ்டிரம், ஒடிஸா, தில்லி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பிகார், சத்தீஸ்கர், தமிழகம் ஆகிய மாநிலங்களில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.