மாணவர்களின் நலனுக்காகவே சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து: பிரதமர் மோடி
மாணவர்களின் நலனுக்காகவே சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


மாணவர்களின் நலனுக்காகவே சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல் சூழலில் மாணவா்களின் உடல்நலனை கருத்தில்கொண்டு நிகழாண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வு ரத்து செய்யப்படும் என மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினா் பாராட்டு தெரிவித்தனா்.
சுட்டுரையிலும் பலா் வரவேற்பு தெரிவித்துள்ளனா். இந்த நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்கள், பெற்றோர்களுடன் காணொலி வாயிலாக இன்று கலந்துரையாடிய பிரதமர் மோடி, தேர்வுகள் குறித்து மாணவர்கள் ஒருபோதும் பதற்றமடையக் கூடாது.
மாணவர்களின் நலனுக்காகவே சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வு ரத்தானதால் கிடைத்துள்ள நேரத்தை மாணவர்கள் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கிடைத்துள்ள நேரத்தை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...