ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மாணவர்களின் நலனுக்காகவே சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து: பிரதமர் மோடி

மாணவர்களின் நலனுக்காகவே சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :3 ஜூன் 2021, 2:54 pm

DIN

மாணவர்களின் நலனுக்காகவே சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

கரோனா பரவல் சூழலில் மாணவா்களின் உடல்நலனை கருத்தில்கொண்டு நிகழாண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வு ரத்து செய்யப்படும் என மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினா் பாராட்டு தெரிவித்தனா். 

சுட்டுரையிலும் பலா் வரவேற்பு தெரிவித்துள்ளனா். இந்த நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்கள், பெற்றோர்களுடன் காணொலி வாயிலாக இன்று கலந்துரையாடிய பிரதமர் மோடி, தேர்வுகள் குறித்து மாணவர்கள் ஒருபோதும் பதற்றமடையக் கூடாது. 

மாணவர்களின் நலனுக்காகவே சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வு ரத்தானதால் கிடைத்துள்ள நேரத்தை மாணவர்கள் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கிடைத்துள்ள நேரத்தை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.