புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நாளை மறுநாள் காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை(ஜூன்.11) காங்கிரஸ் சார்பில் நாடுதழுவிய போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image

தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை

Updated On :9 ஜூன் 2021, 11:59 am IST


புதுதில்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை(ஜூன்.11) காங்கிரஸ் சார்பில் நாடுதழுவிய போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிப்பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

தலைநகர் தில்லி, மகாராஷ்டிரம், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் பெட்ரோல் ரூ.100-ஐ நெருங்குகிறது. புதன்கிழமை காலை சென்னையில் ஒரு லிட்டர்ரூ.96.94 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.91.15 ஆக விற்னை செய்யப்பட்டு வருகிறது. 

கரோனா பொதுமுடக்கம் அமலால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை அனுபவித்து வரும் சூழலில், நமது நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிப்பொருள்களின் விலை தொடர்ந்து உயா்த்தப்பட்டு வருகிறது. இந்த விலை உயா்வு காரணமாக மக்கள் பயன்படுத்தக்கூடிய அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலை பல மடங்கு உயா்ந்து வருகிறது.

இந்நிலையில்,  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை(ஜூன்.11) காங்கிரஸ் சார்பில் நாடுதழுவிய போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதொடர்பாக காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் தொடர் விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் நிலையங்களுக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை( ஜூன் 11) காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய அளவில் அடையாளம் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.