டெல்டா பிளஸ்: தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்

கரோனா மேலும் பரவாமல் தடுக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக தலைமைச்செயலருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். 
டெல்டா பிளஸ்: தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்
Updated on
1 min read

கரோனா மேலும் பரவாமல் தடுக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக தலைமைச்செயலருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். 
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், சென்னை, காஞ்சிபுரத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். டெல்டா பிளஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும். 
டெல்டா பிளஸ் நுரையீரலை கடுமையாக பாதித்து எதிர்ப்பு சக்தியை வெகுவாக குறைக்கும் தன்மை கொண்டது. எனவே, பரிசோதனை, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். 
தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று உறுதியான நிலையில் மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com