தில்லி காவல்துறை ஆணையராக பாலாஜி ஸ்ரீவஸ்தவ் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
தில்லி காவல் ஆணையராக இருந்த எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா இன்று பெற்றதையடுத்து, புதிய காவல்துறை ஆணையராக பாலாஜி ஸ்ரீவஸ்தவ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
1988ஆம் ஆண்டு காவல் பணியில் தேர்வான பாலாஜி ஸ்ரீவஸ்தவ், தில்லி லஞ்ச ஒழிப்புத் துறையின் சிறப்பு காவல் ஆணையராக உள்ளார். இவருக்கு கூடுதல் பொறுப்பாக தில்லி காவல்துறை ஆணையர் பதவி வழங்கப்பட்டுள்ளது.