கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தா்மடம் தொகுதியில் போட்டியிடும் கேரள முதல்வர் பினராயி விஜயன் திங்கள்கிழமை காலை வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைத் தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் ஆட்சியர் அலுவலகம் வந்து ஆவணங்களைச் சமர்ப்பித்தார் முதல்வர் பினராயி விஜயன்.
இவருடன், கன்னூர் மாவட்டச் செயலாளர் எம்.பி.ஜெயராஜன், மாக்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தர்மடம் தொகுதியில் இரண்டாவது முறையாக இவர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.