வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தில்லி அரசின் திட்டத்தில் மத்திய அரசின் பெயர்: கேஜரிவால் கண்டனம்

தில்லி அரசு செயல்படுத்தும் திட்டத்தில் மத்திய அரசின் பெயர் திணிக்கப்படுவதற்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் (கோப்புப்படம்)
Updated On :20 மார்ச் 2021, 9:59 am

DIN


தில்லி அரசு செயல்படுத்தும் திட்டத்தில் மத்திய அரசின் பெயர் திணிக்கப்படுவதற்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தில்லியில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ரேஷன் பொருள்களை வாங்குவதால், வீடுகளுக்கே ரேஷன் பொருள்களைக் கொண்டு சேர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், தில்லி அரசின் திட்டத்தில் மத்திய அரசின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதாக அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் பேசியதாவது, இந்தத் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று மத்திய அரசு தில்லி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. 

இதனைத் தொடர்ந்து எனது அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டேன். அப்போது ரேஷன் பொருள்களை வீடுகளில் சேர்க்கும் திட்டத்தில் இருக்கும் பெயர்களை அகற்ற வேண்டும் என்றும், பெயர் இல்லாமல் திட்டத்தை செயல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.