மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

அசாம் சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

News image

அசாம் சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

Updated On :23 மார்ச் 2021, 11:17 am IST

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27 முதல் 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் தேசிய தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில் பாஜக செவ்வாய்க்கிழமை தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

இந்த நிகழ்வில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், பாஜக ஆட்சிக்கு வந்தால் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டு மக்களின் குடியுரிமை பாதுகாக்கப்படும் எனவும் மாநிலத்தின் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அசாம் மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.