முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தலைமையில் 13 பேர் கொண்ட கரோனா நிவாரணப் பணிக் குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.
கட்சியின் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அம்பிகா சோனி, முகுல் வாஸ்னிக், பவன் குமார் பன்சால், பிரியங்கா காந்தி வதேரா, கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, மணீஷ் சத்ரத், அஜோய் குமார், பவன் கேரா, குர்தீப் சிங், பி.வி. ஸ்ரீனிவாஸ் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.