ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பிரதமரை விமரிசித்து போஸ்டர்: தில்லியில் 15 பேர் கைது

​தில்லியில் கரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை விமரிசித்து சுவரொட்டி (போஸ்டர்) ஒட்டியதற்காக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :15 மே 2021, 10:48 am

DIN


தில்லியில் கரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை விமரிசித்து சுவரொட்டி (போஸ்டர்) ஒட்டியதற்காக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நகரத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட அந்த சுவரொட்டியில், "நமது குழந்தைகளின் தடுப்பூசிகளை எதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்புனீர்கள் பிரதமர் நரேந்திர மோடி?" என்று குறிப்பிட்டிருந்ததாக தில்லி காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் இதுதொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர் இதுபற்றி தெரிவித்தது:

"இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொண்டு புகார்கள் பெறப்பட்டால் மேலும் வழக்குகள் பதிவு செய்யப்படும். தற்போதைக்கு யார் சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.