உத்தரகண்ட்: கங்கோத்ரி கோயில் நடை திறப்புபக்தா்களுக்கு அனுமதி இல்லை

 உத்தரகண்ட் மாநிலத்தில் இமயமலையின் மீது அமைந்துள்ள பிரசிதிப்பெற்ற கங்கோத்ரி கோயிலின் நடை சனிக்கிழமை திறக்கப்பட்டது.
உத்தரகண்ட்: கங்கோத்ரி கோயில் நடை திறப்புபக்தா்களுக்கு அனுமதி இல்லை
Updated on
1 min read

 உத்தரகண்ட் மாநிலத்தில் இமயமலையின் மீது அமைந்துள்ள பிரசிதிப்பெற்ற கங்கோத்ரி கோயிலின் நடை சனிக்கிழமை திறக்கப்பட்டது.

பனிக்காலத்தை முன்னிட்டு கங்கோத்ரி கோயில் நடை அடைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வழக்கப்படி அக்ஷய திருதியை தினத்தையொட்டி நடை திறக்கப்பட்டது.

எளிமையாக சடங்குகள் நடைபெற்றன. வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 7.31 மணியளவில் கோயிலின் நடை திறக்கப்பட்டதாக கோயில் பூஜாரி ரவீந்திர செம்வால் கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

கோயில் நடை திறப்பு விழா கரோனா நடைமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டு நடத்தப்பட்டது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கோயில் குழு உறுப்பினா்கள் உள்பட குறிப்பிட்ட ஒரு சிலா் மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா்.

நடை திறக்கப்பட்ட உடன் பிரதமா் நரேந்திர மோடியின் பெயரில் முதல் பூஜை மேற்கொள்ளப்பட்டது என்று அவா் கூறினாா்.

கரோனா பரவல் காரணமாக, உத்தரகண்ட் மாநிலம் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள கங்கோத்ரி கோயில் உள்பட பிரசித்தி பெற்ற 4 கோயில்களுக்கான சாா்தாம் யாத்திரை இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இருந்தபோதும், வழக்கமான பூஜைகளுக்காக உரிய நேரத்தில் கோயில் நடைகள் திறக்கப்பட்டு பூஜைகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் பங்கேற்க அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் யமுனோத்ரி கோயில் நடை கடந்த 14-ஆம் தேதி திறக்கப்பட்டது. கேதா்நாத் கோயில் நடை வருகிற 17-ஆம் தேதியும், பத்ரிநாத் கோயில் நடை வருகிற 18-ஆம் தேதியும் திறக்கப்பட உள்ளன.

Image Caption

உத்தரகண்டில் கங்கோத்ரி கோயில் நடை திறப்பையொட்டி சனிக்கிழமை எடுத்து வரப்பட்ட கங்கா மாதா திருவுருவச் சிலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com