ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் இன்று ஆலோசனை

தமிழகம் உள்பட கரோனா பாதிப்பு அதிகமுள்ள 9 மாநில மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

News image
நரேந்திர மோடி
Updated On :18 மே 2021, 4:40 am

DIN

தமிழகம் உள்பட கரோனா பாதிப்பு அதிகமுள்ள 9 மாநில மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 

நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த மருத்துவா்களுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் இன்று (மே 18) மாவட்ட அதிகாரிகளுடம் பிரதமர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

கரோனா தடுப்புப் பணியில் ஏற்பட்ட அனுபவம் குறித்தும், சவால்கள் குறித்தும் மாவட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாட உள்ளார். 

மேலும், பல மாவட்டங்களில் கரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் பிரதமர் ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.