சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, பஞ்சாயத்து ராஜ், ஆயுஷ், கிராம களப்பணியாளர்கள் என பலர் இப்பணியில் ஈடுபட்டனர். காவல்துறையுடன், கிராம மக்களும், பல அரசு அதிகாரிகளும் இணைந்து மக்களின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இதை அறிந்த மக்கள் கிருஷ்ணபட்டணத்திற்கு படையெடுக்க தொடங்கினர். காலை 5 மணிக்கு மக்கள் வரிசை 6 கி.மீ தொலைவை கடந்தது. ஆயிரகணக்கில் இரு சக்கர வாகனங்கள், கார்கள், 2 ஆயிரம் ஆம்புலன்ஸ்கள் என கிருஷ்ணபட்டணம் அதிர தொடங்கியது. இதனால் போக்குவரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மருந்து வழங்குவது தொடங்கப்பட்டவுடன் அதை பெற மக்கள் முண்டியடிக்க தொடங்கினர். ஆயிரம் பேருக்கு வரை மருந்து வழங்கப்பட்டதும், பெரும் கூட்டம் காரணமாக கரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், மருந்து வழங்குவது தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது.