நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

'முறைகேடுகளைத் தடுக்க மட்டுமே சமூக வலைதளங்களுக்குப் புதிய விதிகள்'

தவறுகளையும் முறைகேடுகளையும் தடுப்பதற்காக மட்டுமே சமூக வலைதளங்களுக்குப் புதிய விதிகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கமளித்துள்ளார்.

News image

அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் (கோப்புப்படம்)

Updated On :27 மே 2021, 8:01 am

DIN


தவறுகளையும் முறைகேடுகளையும் தடுப்பதற்காக மட்டுமே சமூக வலைதளங்களுக்குப் புதிய விதிகள் விதிக்கப்பட்டுள்ளதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கமளித்துள்ளார்.

இந்த புதிய விதிகள் பாதிக்கப்படும் அல்லது சாதாரண சமூக வலைதள பயனாளர்களுக்கு சாதகமானதாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

முகநூல், சுட்டுரை உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கான புதிய வழிகாட்டு விதிமுறைகள் புதன்கிழமை (மே 26) அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிகளின்படி, தேவைப்படும் நிலையில் சமூக ஊடகத்தில் சில முக்கியப் பதிவுகளை முதலில் வெளியிட்டவரின் விவரத்தை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

ஆனால் இது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தன்மறைப்பு உரிமைக்கு எதிரானது என்று வாட்ஸ்ஆப் புகார் தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கமளித்துள்ளார். அவர் பேசியதாவது, 

தவறுகளையும் முறைகேடுகளையும் தடுப்பதற்காக மட்டுமே சமூக வலைதளங்களுக்கு புதிய விதிகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிகள் பாதிக்கப்படும் அல்லது சாதாரண சமூக வலைதள பயனாளர்களுக்கு சாதகமானதாகவே இருக்கும்.

தனிமனித உரிமைகளான தனிப்பட்ட தரவுகளுக்கு அரசு மரியாதையையும் அங்கீகாரத்தையும் அளிக்கிறது. வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தும் சாதாரண மக்கள் இந்த விதிமுறைகளால் அச்சமடைய வேண்டாம். விதிகளுக்கு புறம்பாகவும், அரசமைப்பு, சட்டம்- ஒழுங்கு, நாட்டின் இறையாண்மை போன்றவற்றிற்கு எதிரான வதந்திகளை முதலில் யார் உருவாக்குவது போன்ற தரவுகளுக்காக மட்டுமே புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.