ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஒடிசா, மேற்குவங்கத்தில் புயல் பாதிப்புகள்: பிரதமர் மோடி நாளை (மே.28) ஆய்வு

ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி நாளை பார்வையிட உள்ளார்.

News image
ஒடிசா, மேற்குவங்கத்தில் புயல் பாதிப்புகள்: பிரதமர் மோடி நாளை (மே.28) ஆய்வு
Updated On :27 மே 2021, 10:31 am

DIN

ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி நாளை பார்வையிட உள்ளார்.

வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தில் உள்ள தம்ரா கடலோரப் பகுதியில் புதன்கிழமை (மே 26) மதியம் கரையைக் கடந்தது.

இந்தப் புயலால் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் கடலோரப் பகுதிகளிலிருந்த வீடுகள், மரங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்டவை பலத்த சேதமடைந்தன. முறையான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் உயிர் சேதங்கள் பெருமளவு தவிர்க்கப்பட்டது. எனினும் யாஸ் புயலால் பொருள் சேதங்கள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளன. 

இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி நாளை பார்வையிட உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் புவனேஸ்வரில் நடைபெற உள்ள புயல் பாதிப்பு ஆய்வுக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.