உ.பி: அதிகரிக்கும் ஜிகா வைரஸ் தொற்று

உத்தரப் பிரதேச மாநிலத்தில்  ஜிகா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்திருக்கிறது.
உ.பி: முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு
உ.பி: முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநிலத்தில்  ஜிகா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்திருக்கிறது.

கடந்த அக். 25 ஆம் தேதி உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் பணியாற்றி வந்த இந்திய விமானப் படை அதிகாரி ஒருவருக்கு முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. பின் அடுத்தடுத்து 3 பேருக்கு ஜிகா பாதித்திருந்தது கண்டறியப்பட்டது. 

தற்போது அதே மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் விமானப்படை பகுதியைச் சுற்றி இருப்பவர்கள் என மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

அதிகப்படியான காய்ச்சல் , உடல் வெப்பநிலையால் பாதிக்கப்பட்டிருந்தவரின் ரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்த போது ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டதாக மாநில தலைமை மருத்துவ அதிகாரி நேபால் சிங் தெரிவித்திருக்கிறார். 

மேலும் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பிலிருந்த , பணியாற்றியவர்கள்  என 645 பேருக்கு மேல் ரத்த மாதிரிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அவர்களின் வீடுகளும் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தொற்றுக்கு ஆளானவர்கள் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com