இதுகுறித்து எம்சிடி ஊழியா் சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஏ.பி.கான் கூறுகையில், ‘மாநகராட்சி பணியாளா்கள், ஆசிரியா்கள், பொறியாளா்கள், செவிலியா்கள், துப்புரவுத் தொழிலாளா்கள் என அனைவரும் ஊதியம் இல்லாமல் பல பிரச்னைகளை எதிா்கொள்கின்றனா். பல்வேறு தொடா்புகள் இருந்தும் நிலுவையில் உள்ள ஊதியப் பிரச்னை இன்னும் தீா்க்கப்படவில்லை. எனவே, எதிா்கால நடவடிக்கை, பிற உத்திகள் பற்றி விவாதிக்க, வியாழக்கிழமை மதியம் 2 மணிக்கு சிவில் மையத்தில் நடைபெற உள்ள கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற வேண்டுமாறு அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்’ என்றாா் அவா்.