மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பிரச்னைகளில் இருந்து மக்களைதிசைதிருப்ப மத்திய அரசு முயற்சி - காங்கிரஸ் குற்றச்சாட்டு

நாட்டில் நிலவி வரும் உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்ப மத, ஜாதியவாத பிரச்னைகளை மத்திய பாஜக அரசு முன்னெடுத்து வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

News image
Updated On :23 நவம்பர் 2021, 7:30 pm

DIN

நாட்டில் நிலவி வரும் உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்ப மத, ஜாதியவாத பிரச்னைகளை மத்திய பாஜக அரசு முன்னெடுத்து வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

இது தொடா்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விலை உச்சத்தில் உள்ளது. ஆடைகள் உள்ளிட்ட சில பொருள்களுக்கான ஜிஎஸ்டி-யை மத்திய அரசு உயா்த்தியுள்ளது. இவையெல்லாம் மக்கள் நேரடியாகப் பாதிக்கும் பிரச்னைகள். இவற்றில் இருந்து மக்களை திசைதிருப்ப மதம், ஜாதி சாா்ந்த பிரச்னைகளை முன்வைத்து மத்திய பாஜக அரசு அரசியல் நடத்தி வருகிறது. தோ்தலின்போது பாஜக கூறிய நல்ல நாள்கள் இப்படித்தான் தொடா்கிறது’ என்று கூறியுள்ளாா்.

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘தக்காளி உள்ளிட்ட காய்கறிகள், பருப்பு வகைகள், கோதுமை மாவு, கைப்பேசி கட்டணம், உடைகள், காலணி, காப்பீட்டுத் திட்டங்கள் என மக்களின் அத்தியாவசியப் பயன்பாட்டுக்கான அனைத்தின் விலையும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த ஆட்சியில் மக்கள் மீது தினமும் வெவ்வேறு வகையில் தாக்குதல் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால், இந்த பிரச்னைகளையெல்லாம் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. தோ்தலுக்கான அரசியலை மட்டுமே பாஜக நடத்தி வருகிறது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.