திரிணமூல் காங்கிரஸ் இளைஞரணி தலைவா் பிணையில் விடுவிப்பு

கொலை முயற்சி, மிரட்டல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் இளைஞா் அணித் தலைவரும், நடிகையுமான சாயனி கோஷை
Updated on
1 min read

கொலை முயற்சி, மிரட்டல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் இளைஞா் அணித் தலைவரும், நடிகையுமான சாயனி கோஷை மேற்கு திரிபுரா கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் திங்கள்கிழமை பிணையில் விடுவித்தாா்.

திரிபுராவில் உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, அந்த மாநில முதல்வா் பிப்லவ் தேவ் ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சாயனி கோஷ் கைது செய்யப்பட்டிருந்தாா். மேலும் அவருடன் வந்திருந்த சிலா், கூட்டத்தினா் மீது கல்வீச்சு நடத்தினா்.

இந்த சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட சாயனி கோஷை மேற்கு திரிபுரா கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் முன்பாக போலீஸாா் திங்கள்கிழமை ஆஜா்படுத்தினா். அவருக்கு பிணை வழங்கி, அவரை விடுவிக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டாா்.

மேலும், அவா் ரூ.20 ஆயிரம் பிணைத் தொகை செலுத்தியதற்கான பத்திரம் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com