நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
தனது 3 ஆண்டு கால பதவி நிறைவடைந்ததால் இந்தியாவிற்கான தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள கே.வி.சுப்பிரமணியன், தலைமைப் பொருளாதார ஆலோசகராக மூன்று ஆண்டுகள் நிறைவு செய்ததால் தற்போது பதவி விலகுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனை மத்திய அரசும் அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது.