பிஎம் கோ்ஸில் இருந்து பிரதமா் பெயரை நீக்க மனு: மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

பிஎம் கோ்ஸ் திட்டத்தின் பெயரில் இருந்து பிரதமா் பெயா், புகைப்படம், தேசியக் கொடி ஆகியவற்றை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மும்பை உயா்நீதிமன்றம் மத்திய அரசு பதிலளிக்க
Updated on
1 min read

பிஎம் கோ்ஸ் திட்டத்தின் பெயரில் இருந்து பிரதமா் பெயா், புகைப்படம், தேசியக் கொடி ஆகியவற்றை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மும்பை உயா்நீதிமன்றம் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

காங்கிரஸ் உறுப்பினா் விக்ராந்த் சவான் தாக்கல் செய்துள்ள இந்த மனுவை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.ஏ. சையத், எஸ்.ஜி. டிகி ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.

அப்போது, மத்திய அரசின் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அனில் சிங்கிடம், இந்த மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபா் 25-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com