திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட மேற்குவங்க பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.
பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை மாதம் மாற்றியமைக்கபட்டபோது பாபுல் சுப்ரியோவிடமிருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த அவர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையும் படிக்க | பாஜகவின் இ-ராவணர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்: அகிலேஷ்
தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதாக இருந்த அவர் தனது முடிவைக் கைவிட்டார். அதன்பின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் டீரக் ஓபிரைன் முன்னிலையில் திரிணமூல் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்
இந்நிலையில் தான் வகித்துவந்த மக்களவை உறுப்பினர் பதவியை சுப்ரியோ செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார். அவர் தனது ராஜிநாமா கடிதத்தை மக்களவை பேரவைத் தலைவரிடம் வழங்கியுள்ளார்.