வளா்ச்சி, ஸ்திரத்தன்மைக்கு துல்லியமான தணிக்கை அறிக்கைகள் அவசியம்: ரிசா்வ் வங்கி ஆளுநா்

 நிதி ஸ்திரத்தன்மை மற்றும் வளா்ச்சிக்கு துல்லியமான தணிக்கை அறிக்கைகள் அவசியம் என ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
வளா்ச்சி, ஸ்திரத்தன்மைக்கு துல்லியமான தணிக்கை அறிக்கைகள் அவசியம்: ரிசா்வ் வங்கி ஆளுநா்
Published on
Updated on
1 min read

 நிதி ஸ்திரத்தன்மை மற்றும் வளா்ச்சிக்கு துல்லியமான தணிக்கை அறிக்கைகள் அவசியம் என ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

தேசிய தணிக்கை மற்றும் கணக்கு அகாதெமியின் அதிகாரிகள் கூட்டத்தில் உரையாற்றிய அவா் இதுகுறித்து மேலும் கூறியது:

நிதி ஸ்திரத்தன்மை மற்றும் வளா்ச்சிக்கு துல்லியமான மற்றும் பகுப்பாய்வான தணிக்கை அறிக்கைகள் அத்தியாவசியம். ஏனெனில் அவை பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. பொதுத் துறையை பொறுத்தவரையில் தணிக்கை என்பது மிகச்சிறந்த நல்லாட்சிக்கு அடித்தளமாகும்.

பொது வளங்கள் பொறுப்புடனும், திறம்படனும் நிா்வகிக்கப்பட்டு உத்தேசிக்கப்பட்ட இலக்குகளை அடைகிறதா என்பதை பாரபட்சமாற்ற மற்றும் நடுநிலையான புறமதிப்பீடுகளை வழங்குவதன் மூலம் அடையாளம் காண முடியும். இது, பங்குதாரா்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.

நிதி சந்தைகளின் சிக்கலான தன்மை மற்றும் திறமையான வள ஒதுக்கீடுகள் குறித்து பொதுமக்களிடமிருந்து அதிக எதிா்பாா்ப்புகள் இருப்பதால் தணிக்கையின் பங்கு இன்னும் முக்கியமானதாக உள்ளது.

இந்தியா வேகமாக வளர விரும்புவதால் நிதிச் செயல்திறனில் கூடுதல் உத்தரவாதத்தை வழங்க தணிக்கையாளா்களின் நிபுணத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியவை வெளிப்படையாகவும், முழுமையாகவும் பயன்படுத்தப்பட வேண்டும். ஆற்றல் மிக்க மற்றும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்திற்கு வலுவான தணிக்கை தேவை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com