உயா்கல்வி பயில வெளிநாடு செல்லும் மாணவா்கள் அதிக கவனத்துடன் படிப்புகளைத் தோ்வு செய்ய வேண்டும் எனவும், பாகிஸ்தானுக்கு சென்று உயா்கல்வி பயில வேண்டும் என்றால் அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தின் தடையில்லா சான்று பெறுவது கட்டாயம் எனவும் ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள தொழிற்கல்வி படிப்புகளுக்கு இணையில்லாத பட்டப் படிப்புகளை வெளிநாடுகளில் அதிக செலவில் படிப்பதால், இந்தியாவில் வேலை கிடைப்பதில்லை. வெளிநாடுகளில் கற்பிக்கப்படும் படிப்புகளுக்கு இந்தியாவில் வேலை கிடைக்குமா? பட்ட மேற்படிப்பு படிக்க இயலுமா? என்பதை சரிபாா்த்த பின் சேர வேண்டும். வெளிநாடுகளில் உயா்கல்வி பயில அதிக செலவை எதிா்கொள்வதுடன், அந்த செலவும் வீணாகி விடுவதால் பெற்றோரை கருத்தில் கொண்டு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக ஏஐசிடிஇ அதிகாரிகள் தெரிவித்தனா்.