கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உ.பி.யில் பரவும் டெங்கு காய்ச்சல்: பலி 50 ஆனது

டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் உத்தரப்பிரதேச மாநில அரசு மருத்துவமனைகளில் ஏராளமானோர் குவிந்து வரும் நிலையில், காய்ச்சல் பாதித்து பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

News image
உ.பி.யில் பரவும் டெங்கு காய்ச்சல்: பலி 50 ஆனது
Updated On :28 ஜனவரி 2024, 4:04 am

DIN


பிரோஸாபாத்: டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் உத்தரப்பிரதேச மாநில அரசு மருத்துவமனைகளில் ஏராளமானோர் குவிந்து வரும் நிலையில், காய்ச்சல் பாதித்து பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3 பேர் பலியானதைத் தொடர்ந்து இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரோஸாபாத் மாவட்டத்தில் பத்து பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக முதன்மை சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் சுமார் 36 முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கு 3,719 பேர் காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், காய்ச்சல் பாதித்து வரும் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கவனக்குறைவாக இருந்த மூன்று மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.