மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளத்தில் பதிவிடுவதற்காக போக்குவரத்து அதிகமுள்ள சாலையில் நடனமாடிய பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
போக்குவரத்து அதிகமுள்ள முக்கியச் சாலை ஒன்றில் வாகனங்கள் சிக்னலுக்காக காத்திருந்தபோது, பொதுமக்கள் கடக்கும் பாதையில் புகுந்து அந்தப் பெண் நடனமாடும் விடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இந்த விடியோ தொடா்பாக கடும் கண்டனம் எழுந்தது.
இந்த விவகாரம் மாநில உள்துறை அமைச்சா் நரோத்தம் மிஸ்ராவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, அந்தப் பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு அமைச்சா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, பொதுஇடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக அந்தப் பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதன்படி அப்பெண்ணுக்கு முதல்கட்டமாக அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவா் மீண்டும் இதுபோல விடியோக்களை வெளியிட்டால், அடுத்தகட்டமாக கைது நடவடிக்கை எடுக்கப்படவும் வாய்ப்புள்ளது என்று காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, தனது செயல் குறித்து விளக்கமளித்து அந்தப் பெண் மற்றொரு விடியோ வெளியிட்டாா். அதில், அனைவரும் போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்ற விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில்தான் அந்த விடியோவை வெளியிட்டதாகக் கூறியிருந்தாா்.
‘சமூக வலைதளத்தில் பிரபலமாக வேண்டும், பிறரைக் கவர வேண்டும் என்ற நோக்கில் பலரும் இதுபோன்று பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனா். உண்மையில் இதுபோன்ற நபா்களுக்கு மனநல ஆலோசனை தேவைப்படுகிறது’ என சமூக ஆா்வலா்கள் கருத்துக் கூறியுள்ளனா்.