புது தில்லி: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த 2020ஆம் ஆண்டில், கள்ள நோட்டுகளும் அதிகளவில் புழக்கத்தில் இருந்திருப்பதாக ஒரு அதிர்ச்சிதரும் புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.
இதுவரை இல்லாத வகையில், ஒரே ஆண்டில் இந்த அளவுக்கு கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதேயில்லை என்று சொல்லுமளவுக்கு இருந்துள்ளது. அதாவது, 2020ஆம் ஆண்டில் மட்டும் ரூ.92.17 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவல், தேசிய குற்றப் பதிவு ஆணையம் வெளியிட்ட தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
இதுவே இந்த அளவுக்கு அதிர்ச்சி அளிக்கிறதென்றால், மற்றுமொரு அதிர்ச்சித் தகவல் அடுத்தது காத்திருக்கிறது. அதுதான். மகாராஷ்டிரத்தைப் பற்றியது. அதாவது, ஒரு ஆண்டு முழுக்க கைப்பற்றப்பட்ட 92 கோடி கள்ள நோட்டில், மகாராஷ்டிரத்தில் இருந்து மட்டும் 83.61 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதுதான். இந்த நோட்டுகளின் எண்ணிக்கை 6,99,495 ஆகும்.
அதாவது ஒட்டுமொத்த நாட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டில் 90 சதவீதம் ஒரே மாநிலத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருப்பதுதான். அதற்கடுத்த இடத்தில் மேற்கு வங்கம் (2.46 கோடி), ஆந்திரம் 1.4 கோடியுடன் மூன்றாவது இடத்திலும், தமிழகம் 1 கோடி கள்ள நோட்டுடன் நான்காவது இடத்திலும் உள்ளன.
கள்ள நோட்டுகளை எல்லாம் ஒழிப்பதற்காக என்று, 2016ஆம் ஆண்டில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழக்கம் செய்த நடவடிக்கைக்குப் பிறகு, 2020ஆம் ஆண்டில் இவ்வாறு 92.17 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உச்சம் தொட்டிருக்கிறது என்றால் அது பல்வேறு விமரிசனங்களையும் உருவாக்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்

திமுகவினா் கூப்பன் விநியோகம்: உயா்நீதிமன்றத்தில் முறையீடு

பசிபிக் கடலில் அமெரிக்க தாக்குதலில் போதைப்பொருள் கும்பல் மூவா் கொலை

கட்டாய மத மாற்றத்தை பயங்கரவாத செயலாக அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


