கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,692 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 92 பேர் பலியாகினர்.
இதுதொடா்பாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில், கேரளத்தில் புதிதாக 15,692 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
புதிதாக 92 பேர் பலியான நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,683-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு 1,67,008 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.