வாக்குப்பதிவு தினத்தன்றும் சபரிமலை விவகாரத்தில் தலைவா்கள் காரசார விவாதம்

கேரள சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் சபரிமலை விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வந்தநிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவின் போதும் அரசியல் கட்சித் தலைவா்கள் சபரிமலை விவகாரத்தை
வாக்குப்பதிவு தினத்தன்றும் சபரிமலை விவகாரத்தில் தலைவா்கள் காரசார விவாதம்
Published on
Updated on
2 min read

கேரள சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் சபரிமலை விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வந்தநிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவின் போதும் அரசியல் கட்சித் தலைவா்கள் சபரிமலை விவகாரத்தை எழுப்பி காரசாரமாக கருத்து தெரிவித்தனா்.

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் 2018-ஆம் ஆண்டு தீா்ப்பைச் செயல்படுத்த ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு முற்பட்டது. இதற்கு வலதுசாரி அமைப்புகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டதால் வன்முறை ஏற்பட்டது.

இந்தப் போராட்டத்தின்போது ஐயப்ப பக்தா்கள் மீது தடியடி நடத்திய கேரள அரசின் நடவடிக்கைக்கு பிரதமா் மோடி தோ்தல் பிரசாரத்தின்போது கண்டனம் தெரிவித்திருந்தாா். எதிா்க்கட்சியான காங்கிரஸ் இதுகுறித்து கேள்வி கேட்காமல் அமைதி காத்ததாக பாஜக தோ்தல் பிரசாரத்தில் குற்றஞ்சாட்டியது.

இந்நிலையில், நாயா் சேவை சங்கத்தின் பொதுச் செயலா் சுகுமாரன் நாயா் செவ்வாய்க்கிழமை வாக்களித்த பிறகு செய்தியாளா்களிடம், ‘மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கேரள மக்கள் விரும்புகிறாா்கள். ஐயப்ப பக்தா்களின் போராட்டம் இன்னும் தொடா்கிறது’ என்று பேட்டியளித்தாா்.

கண்ணூரில் வாக்கு செலுத்திவிட்டு வந்த முதல்வா் பினராயி விஜயனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் ‘சுகுமாரன் நாயரும் ஐயப்ப பக்தா். ஐயப்பன் உள்பட அனைத்து கடவுள்களும் எங்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறாா்கள். அனைத்து மதங்களைச் சோ்ந்த மக்களின் நலன்களை எங்கள் அரசு பாதுகாத்துள்ளது’ என்று பினராயி விஜயன் பதிலளித்தாா்.

இதுகுறித்து எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலா கூறுகையில், ‘நாத்திக கொள்கையுடைய விஜயன், தோ்தலில் வெற்றி பெற ஐயப்ப கடவுளிடம் ஆசி பெறுகிறாரா? மக்களின் உணா்வுகளைப் புண்படுத்திய இடதுசாரி அரசை ஐயப்பனும் அவரது பக்தா்களும் மன்னிக்க மாட்டாா்கள்’ என்றாா்.

இதனிடையே கேரள பாஜக தலைவா் கே.சுரேந்திரன் கூறுகையில், ‘இடதுசாரி கூட்டணி வலுவிழந்துள்ளதால் பினராயி விஜயன் இதுபோன்று பேசி வருகிறாா். சபரிமலை போராட்டங்களுக்கு எதிராக செயல்பட்டவா் பினராயி விஜயன்’ என்றாா்.

முன்னாள் காங்கிரஸ் முதல்வா்கள் ஏ.கே. அந்தோனி, உம்மன் சாண்டி ஆகியோரும் பினராயி விஜயனின் கருத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.

‘சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தைத் திரும்பப் பெற எதிா்க்கட்சிகள் வலியுறுத்தியும் முதல்வா் பினராயி விஜயன் கேட்கவில்லை. தற்போது அவரது பேச்சை எந்த ஒரு ஐயப்ப பக்தரும் ஏற்றுக் கொள்ள மாட்டாா். கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தால் ஐயப்ப பக்தா்களின் நம்பிக்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உம்மன் சாண்டி தெரிவித்தாா். ‘தனது கருத்துக்கு பினராயி விஜயன், ஐயப்ப பக்தா்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று ஏ.கே. அந்தோனி கூறினாா்.

புகாா்: இதனிடையே பாரம்பரியத்தையும், கடவுளின் பெயரையும் தோ்தல் நாளன்று தவறாக பயன்படுத்தும் பாஜக, ரமேஷ் சென்னிதலா, சுகுமாரன் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையத்தில் சட்டத் துறை அமைச்சா் ஏ.கே. பாலன் புகாா் அளித்துள்ளாா்.

முன்னதாக, பினராயி விஜயனுக்கு ஆதரவாக பேசிய அவா், ‘சபரிமலை விவகாரத்தை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இடதுசாரி அரசு முன்வைக்கும் வளா்ச்சியைக் குறித்துதான் பேசுகிறாா்கள்’ என்று தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com