உத்தரப் பிரதேசத்தில் கரோனாவுக்கு ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அடுத்த மூன்று நாள்களுக்கு தனியார் பள்ளி மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முசாபர்நகரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் தனியார்ப் பள்ளி ஆசிரியர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களை பரிசோதனை செய்துகொள்ளும்படி பள்ளி முதல்வர் சஞ்சல் சக்சேனா தெரிவித்தார்.
இதற்கிடையில் அதிகரித்து வரும் கரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 18 வரை இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.